Tamilவிளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட் – டெல்லி அணியில் இணையும் மிட்செல் மார்ஷ்

பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இந்நிலையில் காயம் காரணமாக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து மிட்செல் மார்ஷ் விலகினார்.

ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் மிட்செல் மார்ஷை டெல்லி அணி 6.5 கோடிக்கு விலைக்கு வாங்கியது. அவருக்கு சர்வதேச போட்டி இருப்பதால் முதல் 3 ஐபிஎல் போட்டிகளில் விளையாடத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மிட்செல் மார்ஷ் டெல்லி அணியுடன் இணைவார். டெல்லி அணியின் பிசியோதெரபிஸ்ட்டாக இருக்கும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தற்போதைய நியூ சவுத் வேல்ஸ் அணியின் பிசியோதெரப்பியுமான பேட் பர்காட் தனிமைப்படுத்தும் காலத்தில் மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து மீள்வதை நிர்வகித்து கொள்வார் என ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் ஐபிஎல் போட்டியின் இரண்டாவது பகுதியில் மிட்செல் மார்ஷ் விளையாட வாய்ப்பு உள்ளது.

பாகிஸ்தான் தொடரில் விளையாடதது மிகுந்த வருத்தமாக உள்ளது. ஆஸ்திரேலியா அணியின் அடுத்த தொடருக்காக எதிர் நோக்கி உள்ளேன் என மிட்செல் மார்ஷ் கூறினார்.

ஆஸ்திரேலியா அணியின் தற்போதைய மிக சிறந்த வீரராக மிட்செல் மார்ஷ் வலம் வருகிறார். கடைசியாக நடந்த டி20 உலகக்கோப்பையை வென்றதில் இவரின் பங்கு அதிகமாகவே இருந்தது. இறுதி போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் மார்ஷ் 77 ரன்கள் எடுத்தது வெற்றிக்கு வித்திட்டது.

டெல்லி அணி முதல் போட்டியில் மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.