Tamilவிளையாட்டு

ஐபிஎல் ஏலத்தில் ரூ.1.5 கோடிக்கு விலை போன 15 வயது வீரர்!

ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் போகவில்லை. அனுபவ வீரரகள் எந்த அணியும் சீண்டவில்லை.

இதற்கிடையில் சில சுவாரஸ்யமான போட்டியும் நடந்தது. பஞ்சாப்-ஐ சேர்ந்த 17 வயதே ஆன பிரப்சிங் சிங்கை ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்வந்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் குதித்தது. இதனால் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கோடிகளை தாண்டியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

அதேபோல் 15 வயதே ஆன ஆல்ரவுண்ர் சிறுவனான பிரயாஸ் ராய் பர்மானை எடுக்க போட்டி நிலவியது. இறுதியில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞசர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *