ஐதராபாத் மராத்தான் போட்டி – லோகோ, சீருடை அறிமுகம்

தெலுங்கானாமாநிலம் ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28-ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டியில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகஸ்ட் 27-ஆம் தேதியன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில், 5 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெறும். 28-ஆம் தேதி 10 கிலோமீட்டர், அரை மாரத்தான் மற்றும் முழு மாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளன.

தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி இந்த மாரத்தான் போட்டிகளுக்கு ஸ்பான்சர் செய்கிறது. இந்நிலையில் நேற்று ஐதராபாத் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாரத்தான் போட்டிகளுக்கான லோகோ, டி.ஷர்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டன. புகழ் பெற்ற பாக்ஸிங் விளையாட்டு வீராங்கனை நிகத் ஜரீன் காணொலி வாயிலாக இதில் கலந்து கொண்டார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools