Tamilவிளையாட்டு

ஐசிசி-க்கு கோலி விடுத்த கோரிக்கை!

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இந்தியா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று 360 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அந்நாட்டில் இந்தியா முதலில் விளையாடியது. அதன்பின் இந்திய மண்ணில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக மூன்று போட்டிகளிலும், தற்போது வங்காளதேச அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா 116 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஒரு தொடர் சொந்த மைதானத்திலும், மற்றொரு தொடர் வெளிநாட்டு மண்ணிலும் நடத்த வேண்டும். அப்போதுதான் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இன்னும் பேலன்ஸ் ஆக இருக்கும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *