ஐசிசியின் அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை விராட் கோலி வென்றார்

அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி ஐசிசி பெருமைபடுத்தி வருகிறது. அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.

சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools