Tamilசெய்திகள்

ஏழை பெண்கள் வாழ்க்கை தரம் உயர்த்துவதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம்!

சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் மெய்யனூர் மாரியம்மன் கோவில் அருகில் அம்மா இலவச பெண்கள் தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இதை கடந்த மே மாதம் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தற்போது இந்த மையத்தில் 4 மாதம் பயிற்சி முடித்த 30 பெண்களுக்கு சான்றிதழ் வழங்குவதற்கான நிகழ்ச்சி நடந்தது. இதில் அ.தி.மு.க இடைக்கால பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு இனிப்பு வழங்கி சான்றிதழ் வழங்கினார்.

அப்போது ஏழை-எளிய பெண்கள் வாழ்க்கை தரம் உயர்வதற்காக அம்மா இலவச தையல் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.