எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று.

எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ், எழும்பூர் புழல் கோட்டத்தில் உள்ள எலும்பூர் நாடு என்ற நிர்வாகப் பிரிவின் தலைமையகமாக இருந்தது. கூவம் எழும்பூரில் வடக்குத் திருப்பத்தை எடுத்து, ‘உத்தர வாஹினி’ (வடக்கு பாயும்) நதியாக மாறுவது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் மக்கள் கோட்டையை விட்டு வெளியேறியபோது, எழும்பூர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான இடமாக இருந்தது.

லண்டனின் ஆசியாடிக் சொசைட்டியின் துணை நிறுவனமான மெட்ராஸ் லிட்டரரி சொசைட்டி, பொருளாதார புவியியல் அருங்காட்சியகம் ஒன்றை எக்மோரில் தொடங்க கோரிக்கை விடுத்தது. அதற்காக கவர்னர், லண்டனில் உள்ள கிழக்கிந்தியக் கம்பெனியின் இயக்குனர்களின் அனுமதியைப் பெற்றார்.

View more on kizhakkutoday.in

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools