என்.எல்.சி விரிவாக்க பணிக்காக மீண்டும் நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி நிர்வாகம்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் நிர்வாகம் விரிவாக்கப் பணிகளை தொடங்கி உள்ளது.

சுரங்க விரிவாக்க பணிகளில் தீவிரம் காட்டி வரும் என்.எல்.சி. நிர்வாகம், சுரங்க விரிவாக்க பணிக்காக நிலம் தேவைப்படுவதால் மீண்டும் நோட்டீஸ் வழங்கி உள்ளது.

நெய்வேலி அருகே உள்ள தென்குத்து, அம்மேரி, தொப்பிலிக்குப்பம் உள்பட பல்வேறு கிராமங்களிலும் நிலம் எடுக்கப்பட்டுள்ளது. நில உரிமையாளர்கள் ஆட்சேபணை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட நில எடுப்பு வருவாய் அலுவலரை அணுகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools