Tamilசினிமா

”எனது அடுத்த படம் ரஜினியுடன் தான்” – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. படத்தின் முதல் வார வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருந்த நிலையில், விரைவில் ரூ.1000 கோடி வசூலை தொடவிருக்கிறது.

இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் பொங்கலுக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.

பேட்ட படத்திற்கு பிறகு ரஜினி முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அடுத்ததாக முருகதாஸ் இயக்கத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. அந்த தகவலை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உறுதிப்படுத்தி உள்ளார்.

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட முருகதாஸ், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாகவும், அந்த படம் சர்கார் படம் மாதிரி அரசியல் சம்பந்தப்பட்ட படம் இருக்காது என்றார். மேலும் சூப்பர் ஸ்டார் படத்தில் இடம்பெறும் அம்சங்கள் அனைத்தும் இருக்கும் என்றும் முருகதாஸ் விளக்கினார்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *