Tamilவிளையாட்டு

எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை – ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரகானே

ஐபிஎல் 2019 சீசன் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிகளை குவித்து வருகிறது.

ஆனால் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் வெற்றி பெற போராடி வருகின்றன. இரு அணிகளும் முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நான்காவது போட்டியில் இரு அணிகளும் மோதின. இதில் ஒரு அணி வெற்றி பெற்றே தீரும் என்பதால் ராஜஸ்தான் ராயல்ஸ் முதல் வெற்றியை பெற்றது.

அதன்பின் கொல்கத்தாவுக்கு எதிராக சரணடைந்தது. ஐந்து போட்டியில் நான்கில் தோல்வியடைந்த நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் இருந்த போதிலும், இன்னும் பயப்பட தேவையில்லை என்று அந்த அணியின் கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ரகானே கூறுகையில் ‘‘எங்களுக்கு இன்னும் எச்சரிக்கை மணி அடிக்கவில்லை என்றே நினைக்கிறேன். நாங்கள் ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ளோம். ஒரு போட்டியில் மட்டுமே மோசமாக தோல்வியடைந்துள்ளோம். மற்ற நான்கு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தினோம். அவற்றில் மூன்றில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தொரடர்ந்து தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும்போது முன்னேற்றத்திற்கான வழிகளைத் தேடுவது கடினமானதாகிவிடும். ஆனால் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் அதிக அளவில் யோசிக்க வேண்டியதில்லை. எங்கள் வீரர்கள் அவர்களுடைய சிறப்பாக செயல்பாட்டை வெளிப்படுத்தினால், மகிழ்ச்சியான முடிவு வந்து சேரும்’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *