Tamilசெய்திகள்

உ.பி சட்டமன்ற தேர்தல் – அலிகார், படவுன் பகுதிகளில் அமித்ஷா இன்று பிரசாரம்

உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 10-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

உ.பி.யில் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க.வும், ஆட்சியைக் கைப்பற்ற சமாஜ்வாடி கட்சியும் தீவிரமாக வேலை செய்து வருகின்றன.

இதற்காக, பா.ஜ.க. சார்பில் மந்திரிகள் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் உ.பி.யில் தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் அலிகார் மற்றும் படவுன் பகுதியில் உள்துறை மந்திரி அமித்ஷா இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

அலிகாரில் பொதுக்கூட்டங்களில் பேசும் அமித்ஷா, படவுனில் வீடு வீடாகச் சென்று வாக்குசேகரிக்க உள்ளார்  என அம்மாநில பா.ஜ.க. தெரிவித்துள்ளது.