உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும்!

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் நெல்லை, தென்காசி மாவட்டங்களை தவிர்த்து ஏனைய 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27, 30-ந்தேதி என 2 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு முடிவடையும் நேரத்திற்கு முன் 48 மணி நேரம் (2 நாட்கள்) மது விற்பனையை நிறுத்தி வைப்பதற்காக முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி முதல் 27-ந் தேதி மாலை 5 மணி வரையும், 2-வது வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணி முதல் 30-ந் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2-ந்தேதியும் மதுபானக்கடைகள் மூடியிருக்க மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே, தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், அதனை சுற்றியுள்ள 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் பீர், ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது அதனை இப்பகுதிகளில் எடுத்துச்செல்வதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறியவர்கள் மீது சட்டப்படி பறிமுதல் செய்ய காவல் துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news