உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய பங்கஜ் அத்வானி

மியான்மரில் நடந்த உலக பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய வீரர் பங்கஜ் அத்வானி, உள்நாட்டு வீரர் நா டிவே ஓவை எதிர்கொண்டார். இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பங்கஜ் அத்வானி 6-2 என்ற கணக்கில் டிவே ஓவை சாய்த்து 22-வது முறையாக பட்டத்தை சொந்தமாக்கினார்.
150 புள்ளி வரை கொண்ட குறுகிய வடிவிலான இந்த பில்லியர்ட்சில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் அவர் 5 முறை பட்டத்தை ருசித்து இருக்கிறார். 34 வயதான அத்வானி பெங்களூரைச் சேர்ந்தவர் ஆவார்.
FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news