உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பேன் – குல்தீப் யாதவ் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியில் குல்தீப் யாதவ் – சாஹல் ஜோடி அபாரமாக பந்து வீசி வந்தது. ஆனால் சமீப காலமாக அவர்கள் இணைந்து அணியில் இடம் பிடிப்பது இல்லை. உலக கோப்பை கிரிக்கெட்டுக்குப்பின் ஜடேஜா சிறப்பாக விளையாடுவதால் குல்தீப் யாதவுக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைப்பதில்லை.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என குல்தீப் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து குல்தீப் யாதவ் கூறுகையில் ‘‘ஒவ்வொரு வீரர்களும் அதிகமான போட்டிகளில் விளையாட விரும்புவார்கள். ஏனென்றால் அதிகமான போட்டியில் விளையாடினால், முன்னேற்றம் அதிகமாக இருக்கும். ஐபிஎல் தொடரில் ஒன்றரை மாதங்கள் தொடர்ந்து விளையாட வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலமாக பெர்பார்மன்ஸ் செய்ய முடியும்.

நான் தற்போது ஐபிஎல் தொடருக்கு தயாராகி உள்ளேன். ஐபிஎல் தொடருக்கான திட்டம் தீட்டுவதற்கு எனக்கு போதுமான நேரம் கிடைத்தது. இந்திய அணிக்கு திரும்ப ஐபிஎல் மிகமிக முக்கியமானது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news