Tamilசெய்திகள்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஈரான் தற்போது 11-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஈரானில் ஒரே நாளில் 40,623 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 47 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், ஒரே நாளில் 709 பேர் பலியானதால் அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.03 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து 39.93 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். 6.59 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.