உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறிய பாகிஸ்தான் – பதவி விலகிய பந்து வீச்சு பயிற்சியாளர்

இந்தியாவில் ஒருநாள் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தது. இதுவரை நடந்து முடிந்த போட்டிகள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அணிகளான இங்கிலாந்து, பாகிஸ்தான் லீக் போட்டியுடனே வெளியேறியது. இங்கிலாந்து அணி 9 போட்டிகள் முடிவில் 3 வெற்றிகள் மட்டுமே பெற்றது. பாகிஸ்தான் அணி 4 வெற்றியுடன் 5-வது இடத்தை பிடித்தது.

இந்நிலையில் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெறாத நிலையில் அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் பதவி விலகியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான மோர்கல், இந்த ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தான் அணியில் ஆறு மாத ஒப்பந்தத்தில் பயிற்சியாளராக இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports