Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்! – முதல் சதத்தை பதிவு செய்த இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லண்டனில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், 348 ரன்கள் விளாசிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து வெற்றி பெற 349 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதை அடுத்து களம் இறங்கிய இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களான ஜேசன் ராய் மற்றும் ஈயான் மோர்கன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க ஜோஸ் பட்லர் மற்றும் ஜோ ரூட் கூட்டணி அணியை
சரிவிலிருந்து மீட்டது.

இதில் சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதம் அடித்து அசத்தினார், இவர் 97 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 10 பவுண்டரிகளுடன் 2019 உலகக்கோப்பையின் முதல் சதத்தை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *