Tamilவிளையாட்டு

உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் – இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று பர்மிங்காமில் நடைபெற்ற 38-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோ மற்றும் ஜாசன் ராய் தொடக்க வீரர்கள்களாக களம் இறங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரை சதம் கடந்தனர். ஜாசன் ராய் 66 ரன்களில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய ஜானி பேர்ஸ்டோ 109 பந்துகளில் 111 ரன்கள் எடுத்து முகமது ஷமி பந்தில் அவுட் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் இயான் மோர்கன் 1 ரன்னில், ஜோ ரூட் 44 ரன்னிலும்,ஜோஸ் பட்லர் 20 ரன்னிலும்,வோக்ஸ் 7 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 54 பந்துகளில் 79 ரன்கள் விளாசினார். இறுதியில், 50 ஒவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 337 ரன்கள் எடுத்தது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 338 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் (0) ரன் எதுவும் எடுக்காம் அவுட் ஆனார். பின்னர் ரோகித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். விராட் கோலி 66 ரன்களில் பிளங்கெட் பந்து வீச்சில் அவுட் ஆனார். மறு முனையில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 102 ரன்கள் எடுத்திருந்தபோது கிறிஸ் வோக்ஸ் பந்து வீச்சின் போது கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவரை அடுத்து களமிறங்கிய ரிஷப் பந்த் 32 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் டோனியுடன் ஜோடி சேர்ந்த ஷர்திக் பாண்ட்யா சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். ஷர்திக் பாண்ட்யா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். டோனி 42 ரன்களுடனும் கேதர் ஜாதவ் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் இருந்தார். ஆனால் இறுதியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழந்து 306 ரன்கள் மட்டுமே அடித்தது. இதனால் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இங்கிலாந்து அணியின் பிளங்கெட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *