உலகக்கோப்பை கபடியில் வெற்றி பெற்ற இந்திய அணிகளுக்கு பாராட்டு விழா

முதலாவது உலகக்கோப்பை கபடி போட்டி மலேசியாவில் உள்ள மேலேகா நகரில் நடந்தது. நியூ கபடி பெடரேசன் சார்பில் இந்தப் போட்டிக்கு அணிகள் அனுப்பப்பட்டன.

இந்த போட்டியில் இந்திய அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. ஆண்கள் இறுதிப் போட்டியில் 57-27 என்ற கணக்கில் ஈராக்கையும், பெண்கள் இறுதிப் போட்டியில் 47-29 என்ற கணக்கில் தைவானையும் தோற்கடித்தன.

உலகக்கோப்பையை வென்ற இந்திய கபடி அணிகள் நேற்று சென்னை திரும்பியது. நியூ கபடி பெடரேசன் சார்பில் வீரர், வீராங்கனைகள் பாராட்டப்பட்டனர். ஐகோர்ட்டு நீதிபதி டீக்காராம், போலீஸ் டி.ஜி.பி. ரவி, நியூ கபடி பெடரேசன் பொதுச் செயலாளர் பிரசாத் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டினார்கள்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news