Tamilவிளையாட்டு

உலகக்கோப்பையில் இருந்து விலகைய ஷிகர் தவான் – ஆறுதல் கூறிய பிரதமர் மோடி

உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ஷிகர் தவான் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார். தனது கையில் ஏற்பட்ட காயம், அதனால் அணியில் இருந்து விலகியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

காயத்தால் விலகியுள்ள தவானுக்கு பாரத பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் ஆறுதல் கூறியுள்ளார். மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ‘‘டியர் தவான், ஆடுகளம்தான் உங்களை மிஸ் செய்ய இருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், முன்னதாகவே நீங்கள் குணம் அடைவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. மீண்டும் நீங்கள் கிரிக்கெட் விளையாட்டுக்கு திரும்பி, இந்தியாவின் வெற்றிக்கு பங்களிக்க முடியும்’’ என்று பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *