Tamilசினிமா

உறையவைக்கும் ‘மாநாடு’ பட கதை! – எடிட்டர் பிரவீன் கே.எல் பாராட்டு

செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியுள்ளார்.

இந்த நிலையில், ‘மாநாடு’ படத்தின் கதையை கேட்ட பிரபல எடிட்டர் பிரவீன் கே.எல், இயக்குநர் வெங்கட் பிரபுவை வெகுவாக பாராட்டி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில், உறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம் மற்றும் அசாதாரணமானது, என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *