Tamilசெய்திகள்

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் – 4ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடக்கிறது

403 தொகுதிகளை கொண்ட உத்தர பிரதேச மாநிலத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் முதல் கட்டமாக கடந்த 10-ம் தேதி 58 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக கடந்த 14-ம் தேதி 55 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது. 2 கட்டத்திலும் சேர்த்து 61.20 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. 3-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது.

இந்நிலையில், 59 தொகுதிகளுக்கான 4-வது கட்ட தேர்தல் நாளை நடக்கிறது. இந்த தேர்தலில் 624 வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள்.

லக்னோ, ரேபரேலி, லக்கிம்பூர் உள்ளிட்ட தொகுதிகளில் நடைபெறும் இந்த 4-வது கட்ட தேர்தலுக்கான சூறாவளி பிரசாரம் நேற்று மாலை நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.