Tamilசெய்திகள்

இறுதி நாளன்று இரவு 7 மணி வரை பிரசாரம் செய்யலாம் – தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே உள்ளதால் அனைத்து
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் பிரசாரம் ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி மாலை 5 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என்பதால் பகல் 12:00 மணி முதல் 4 மணி வரை  தேர்தல் பிரச்சாரம் செய்வதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதனை கணக்கில்கொண்டு தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான ஏப்ரல் 4ஆம் தேதி கூடுதலாக 2 மணி நேரம் பிரசாரம் செய்துகொள்ள  அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ஆம் தேதி இரவு 7 மணி வரை தேர்தல் பிரசாரம் செய்யலாம் என்ற தமிழக தலைமை தோதல்  அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார். இதன் காரணமாக அரசியல் கட்சிகள் உற்சாகத்தில் உள்ளன.