இயக்குநர் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, பாண்டியநாடு உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய சுசீந்திரன் சுட்டுப் பிடிக்க உத்தரவு படம் மூலம் நடிகராகவும் அறிமுகமானார்.

கடந்த வாரம் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் இயக்குனர் ராம் பிரகாஷ் ராயப்பாவுக்கு தங்க சங்கிலி பரிசாக அணிவித்து நன்றி தெரிவித்தார். பின்னர் அளித்த பேட்டியில் சுசீந்தரன் கூறியதாவது:-

‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் என் கதாபாத்திரத்தை கூறியதும் வழக்கமான பாத்திரமாக இல்லாததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. முதல் பாதி படம் பார்த்த என் குடும்பத்தார்கள் நடிப்பதில் நான் அவசரப்பட்டு முடிவெடுத்து விட்டேனோ என்று நினைத்தார்கள். ஆனால், இரண்டாவது பாதி பார்த்துவிட்டு மகிழ்ச்சி அடைந்தார்கள்.

இயக்குநராக நான் இன்னும் உச்சம் தொட வேண்டும். அதன்பின் தான் நடிப்பில் கவனம் செலுத்துவேன். இதுபோல் வித்தியாசமான கதாபாத்திரமாக இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன். ‘கென்னடி கிளப்’, ‘ஏஞ்சலினா’ இரண்டில் எந்த படம் முதலில் வெளியாகும் என்று தெரியவில்லை. அதற்கு பின் ‘சாம்பியன்’ வெளியாகும்.

‘ஏஞ்சலினா’ இக்கால இளைஞர்களுக்கான திரில்லர் படமாக இருக்கும்’ இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools