Tamilசினிமா

இயக்குநர் அஹ்மத் இயக்கத்தில் இரண்டாவது முறையாக நடிக்கும் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடித்த ‘பூமி’ படம் கடந்த ஜனவரியில் ஓ.டி.டி. தளத்தில் வெளியானது. தற்போது மணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’, அஹ்மத் இயக்கும் ‘ஜன கன மன’ ஆகிய படங்கள் ஜெயம் ரவி கைவசம் உள்ளன. ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு பாதி முடிந்துள்ள நிலையில் கொரோனாவால் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

‘ஜன கன மன’ படப்பிடிப்பும் பாதியில் நிற்கிறது. இதில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக டாப்சி நடிக்கிறார். இந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை வெளிநாட்டில் படமாக்க வேண்டி உள்ளது. ஆனால் வெளிநாடுகளில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருவதால் படப்பிடிப்பை நடத்துவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.

‘ஜன கன மன’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால், நடிகர் ஜெயம்ரவி, இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் மற்றொரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முழு படப்பிடிப்பையும் இந்தியாவிலேயே நடத்தும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கப்படலாம் என்று தெரிகிறது. மேலும் இப்படத்தை ‘ஜன கன மன’ படத்திற்கு முன்னரே வெளியிட அவர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.