Tamilசினிமா

‘இன்று நேற்று நாளை 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் நடிப்பில் 2015ல் வெளிவந்த படம் இன்று நேற்று நாளை. டைம் டிராவல் கதையை அடிப்படையாகக் கொண்டு வெளியான இப்படத்தை ஆர்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளது. இப்படத்திற்கு இயக்குனர் ஆர்.ரவிக்குமார் ஸ்கிரிப்ட் எழுதி உள்ளார். புதுமுக இயக்குனர் கார்த்திக் பொன்ராஜ் இயக்க உள்ளார். தயாரிப்பாளர் சி.வி.குமாரின் திருக்குமரன் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஜிப்ரான் இசையமைக்க உள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. இதில் நடிகர்கள் விஷ்ணு விஷால், கருணாகரன், தயாரிப்பாளர் சிவி குமார், இசையமைப்பாளர் ஜிப்ரான், இயக்குனர்கள் ஆர்.ரவிக்குமார், கார்த்திக் பொன்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இது சிவி குமார் தயாரிக்கும் 25-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.