இந்தியா, ஆஸ்திரேலியா தான் தலைசிறந்த டெஸ்ட் அணிகள் – மைக்கேல் வாகன் கருத்து

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. நியூசிலாந்து 2-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும், ஆஸ்திரேலியா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.

நியூசிலாந்து 2-வது இடத்திலும், இங்கிலாநது 4-வது இடத்திலும் இருப்பதை என்னால் ஏற்க முடியாது. ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவர்களின் தரவரிசை குப்பை என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மைக்கேல் வாகன் கூறுகையில் ‘‘ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் எந்த நேர்மையும் இல்லை என்று சொல்வேன். இது முற்றிலும் குப்பை. கடந்த இரண்டு வருடங்களாக நியூசிலாந்து அதிக அளவில் டெஸ்ட் தொடரை வென்றதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அவர்கள் 2-வது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்து 3-வது இடத்தில் உள்ளது. இதனால் தரவரிசை சரியாக இருக்க முடியாது. இங்கிலாந்து கடந்த இரண்டு மூன்று வருடங்களாக திணறி வருகிறது. குறிப்பாக வெளிநாட்டு மண்ணில் திணறுகிறது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இரண்டு தலைசிறந்த அணிகள் உள்ளன. ஒன்று இந்தியா, மற்றொன்று ஆஸ்திரேலியா. அவர்கள்தான் உலகின் சிறந்த டெஸ்ட் அணிகள். இதில் எந்த கேள்விக்கும் இடமில்லை.

ஒரேயொரு அணி ஆஸ்திரேலியா வந்து அவர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கினர். 12 மாதத்திற்கு முன் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் தொடரை வென்றுள்ளது.

ஸ்மித், வார்னர், லாபஸ்சாக்னே போன்றோர் அந்த தொடரில் இல்லை. இந்திய அணியில் சுழற்பந்து, வேகப்பந்து, பேட்டிங் என அனைத்திலும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருந்தனர்.

ஆஸ்திரேலியா மண்ணில் அந்த அணிக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்றால், அது இந்திய அணியால்தான் முடியும்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news