Tamilசெய்திகள்

இந்தியாவில் புதிதாக 1,225 பேருக்கு கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,225 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

கடந்த 28-ந் தேதி பாதிப்பு 1,270 ஆக இருந்தது. மறுநாள் 1,259, நேற்று 1,233 ஆக இருந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 24 ஆயிரத்து 440 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பால் மேலும் 28 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் விடுபட்ட மரணங்கள் 21 அடங்கும். மொத்த பலி எண்ணிக்கை 5,21,129 ஆக உயர்ந்தது.

தொற்று பாதிப்பில் இருந்து 1,594 பேர் மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 24 லட்சத்து 89 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 14,307 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றுமுன்தினத்தை விட 397 குறைவு ஆகும்.

நாடு முழுவதும் இதுவரை 184 கோடியே 6 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 22,27,307 டோஸ்கள் அடங்கும்.

இதற்கிடையே நேற்று 6,07,987 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 78.91 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.