இந்தியாவில் டி10 கிரிக்கெட் தொடரை அறிமுகப்படுத்த பிசிசிஐ திட்டம்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008- ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தொடரை பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டு பிரம்மாண்டமாக நடத்தி வருகிறது. இதேபோல் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இந்நிலையில் டி10 கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பர் – அக்டோபரில் இத்தொடர் நடத்தபடலாம் என கூறப்படுகிறது.

பல நாடுகளில் டி10 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவிலும் இந்த தொடர் நடக்கவிருப்பது ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports