Tamilசெய்திகள்

இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் எண்ணிக்கை 5 கோடியை நெருங்குகிறது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 32 லட்சத்து 53 ஆயிரத்து 95 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணையாக 29,03,030 டோஸ்களும், 2-வது தவணையாக 3,50,065 டோஸ்களும் நேற்று போடப்பட்டது. இதுவரை 4 கோடியே 84 லட்சத்து 94 ஆயிரத்து 594 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

இதில் முதல் தவணையாக 4,06,31,153 டோஸ்களும், 2-வது தவணையாக 78,63,441 டோஸ்களும் செலுத்தப்பட்டது.