Tamilசெய்திகள்

இந்தியாவில் இன்று புதிதாக 18,815 பேர் கொரோனாவால் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 18,815 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது.

நேற்று பாதிப்பு 18,930 ஆக இருந்த நிலையில் இன்று சற்று குறைந்துள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 3,661, மேற்கு வங்கத்தில் 2,889, தமிழ்நாட்டில் 2,765, மகாராஷ்டிராவில் 2,678, கர்நாடகாவில் 1,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 85 ஆயிரத்து 554 ஆக உயர்ந்தது. கொரோனா பாதிப்பால் கேரளாவில் 16 பேர், மகாராஷ்டிராவில் 8 பேர் உள்பட மேலும் 38 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,25,343 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று பாதிப்பில் இருந்து மேலும் 15,899 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 37 ஆயிரத்து 876 ஆக உயர்ந்தது. தற்போது 1,22,335 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது நேற்றை விட 2,878 அதிகம் ஆகும். நாடு முழுவதும் நேற்று 17,62,441 டோஸ்களும், இதுவரை 198 கோடியே 51 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று 3,79,470 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 86.57 கோடியாக உயர்ந்துள்ளது.