X

இத்தாலி ஓபன் டென்னிஸ் – ஜெலினாவை வீழ்த்தி சபலென்கா அரையிறுதிக்கு முன்னேறினார்

களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோவுடன் மோதினார். இதில் சபலென்கா 6-2, 6-4 என்ற நேர் செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

நாளை நடைபெறும் அரையிறுதியில் சபலென்கா, அமெரிக்காவின் டேனில் காலின்சுடன் மோதுகிறார். மற்றொரு அரையிறுதியில் போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காஃப் உடன் மோத உள்ளார்.