Tamilவிளையாட்டு

இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒரு நாள் போட்டி ரத்து

இங்கிலாந்து அணி ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா சென்றுள்ளது. ஏற்கனவே முடிவடைந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது.

இந்த நிலையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 4 ஆம் தேதி நடைபெற இருந்தது. தென்ஆப்பிரிக்கா வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த போட்டி நாளைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

முதல் போட்டி பார்ல், போலந்து பார்க்கில் நேற்று நடைபெற இருந்தது. கடைசி கட்ட பரிசோதனையில் இரு அணி வீரர்களும் தங்கியிருந்த ஓட்டலில் உள்ள இரண்டு ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் நேற்றைய போட்டி பாதுகாப்பு கருதி கைவிடப்பட்டது.

இரு அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி இன்றும் (7-ந்தேதி), 3-வது மற்றும் கடைசி போட்டி 9-ந்தேதியும் நடக்கிறது.