Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி – விராட் கோலி விலகல்

ரோகித்சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதிய 3 ஆட்டம் கொண்ட 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இதையடுத்து அடுத்து இந்தியா-இங்கிலாந்து அணிகள் 3 ஆட்டம் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் இன்று முதல் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது போட்டி 14-ந் தேதியும், 3-வது போட்டி 17-ந் தேதியும் நடக்கிறது.

இந்நிலையில் காயம் காரணமாக நேற்றைய பயிற்சியில் விராட் கோலி பங்கேற்கவில்லை. விராட்சி கோலிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் இடுப்பில் அவருக்கு காயம் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், முதல் ஒருநாள் போட்டியில் அவர் விளையாட வாய்ப்பில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.