Tamilவிளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான தொடர் – விராட் கோலிக்கு அட்வைஸ் செய்த கபில் தேவ்

இதையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போட்டியை நடத்த தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய கேப்டன் விராட் கோலி பொறுமையாக பேட்டிங் செய்ய வேண்டும். அதீத ஆக்ரோஷமாக செயல்படக் கூடாது என்று எச்சரிக்கிறேன்.

இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் களம் இறங்கிய உடனே ஆக்ரோஷமாகவும், அதிரடியாகவும் ஆடுவது பலன் அளிக்காது. ஏனெனில் அங்கு பந்து நன்கு ‘ஸ்விங்’ ஆகும். அதை துல்லியமாக கணித்து பொறுமையாக செயல்பட வேண்டியது அவசியம். ஒவ்வொரு பகுதியாக உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஆதிக்கம் செலுத்த தனக்குரிய தருணத்துக்காக காத்திருக்க வேண்டும். அப்போது தான் அதிக ரன்கள் சேர்க்க முடியும்.

சொந்த மண்ணில் இங்கிலாந்தை வீழ்த்துவது கடினம் என்பதை இந்திய அணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஆனால் இந்திய பந்து வீச்சாளர்கள் அங்குள்ள ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் மாறும். அங்குள்ள மைதானங்களில் பந்து சரமாரியாக ‘ஸ்விங்’ ஆகும் என்பதால் இந்த வகையில் இந்திய அணியை விட இங்கிலாந்து வீரர்கள் ஒரு படி மேலே இருப்பார்கள் என தெரிவித்தார்.