Tamilசெய்திகள்

இங்கிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் இந்த தளர்வுகள் ஆபத்து விளைவிக்கும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் இங்கிலாந்து தற்போது 5-ம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், அந்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,476 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 67 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதன்மூலம் பிரான்சை பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து ஐந்தாம் இடத்தில் உள்ளது.

இதேபோல், 48 பேர் கொரோனா பாதிப்புகளால் உயிரிழந்து உள்ளனர். மேலும் 11.98 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.