ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் வித்தியாசமாக இருக்கும் – ரோகித் சர்மா

இந்திய டெஸ்ட் அணி கடந்த முறை ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளைாடும்போது டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித் ஆகியோர் தடை காரணமாக விளையாடாமல் இருந்தனர்.

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என முதன்முறையாக ஆஸ்திரேலியா மண்ணில் கைப்பற்றியது.

இந்நிலையில் வருகிற டிசம்பர்-ஜனவரியில் இந்தியா ஆஸ்திரேலியா மண்ணில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்தத் தொடரில் வார்னர், ஸ்மித் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணிக்க திரும்பியுள்ளனர். இதனால் வருகின்ற டெஸ்ட் தொடர் வித்தியாசமானதாக இருக்கும் என்கிறார் ரோகித் சர்மா.

இதுகுறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘நான் நியூசிலாந்து தொடரை மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் துரதிருஷ்டவசமாக எனக்கு காயம் ஏற்பட்டது. மிகவும் தவறான நேரத்தில் இந்தக் காயம் ஏற்பட்டது. ஆனால், ஆஸ்திரேலியா சென்று டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக காத்திருக்க முடியாது.

ஆஸ்திரேலிய அணி ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த டேவிட் வார்னர் மற்றும் ஸ்மித்துடன் களம் இறங்க இருக்கிறது. இதனால் வருகின்ற தொடர் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news