Tamilசெய்திகள்

ஆஸ்திரியாவில் பனிச்சறுக்கில் சிக்கி 8 பேர் பலி

ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக இறந்தனர் என போலீசார் தெரிவித்தனர்.