ஆஸ்டிரேலிய ஓபன் பேட்மிண்டன் – பிரனாய், ரஜாவத் அறையிறுதிக்கு முன்னேறினார்கள்

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான இந்தியாவின் ஸ்ரீகாந்த், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்துடன் மோதினார்.

இதில் ரஜாவத் 21-13, 21-8 என்ற நேர்செட்டில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு வீரரான இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு 16-21, 21-17, 21-14 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் அந்தோனி ஜிங்டிங்கை வீழ்த்தி அரையிறுதியை எட்டினார்.

இன்று  நடைபெறும் அரையிறுதிப் போட்டியில் எச்.எஸ்.பிரனாய், சக வீரரான பிரியான்ஷு ரஜாவத்தை எதிர்கொள்கிறார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools