Tamilவிளையாட்டு

ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் – இந்திய வீரர் லக்சயா சென் இறுதிப்போட்டியில் தோல்வி

 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.

இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் லக்சயா சென், உலகின் நம்பர்-1 பேட்மிண்டன் வீரரான டென்மார்க்கை சேர்ந்த விக்டர் ஆக்சல்சென்னை எதிர்கொண்டார்.

இதில் 21-10, 21-15 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினார்.

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லக்சயா சென்னும் இரண்டாவது இடம் கிடைத்தது.

இதற்கு முன்பு பிரகாஷ் படுகோனே, கோபிசந்த் இருவரும் ஆல் இங்கிலாந்து போட்டியில் பட்டம் வென்றுள்ளனர். சாய்னா நேவால் 2015ல் இறுதிப்போட்டி வரை முன்னேறி, இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தார்.