Tamilவிளையாட்டு

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் – இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத் சாம்பியன் பட்டம் வென்றார்

ஆர்லீன்ஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பிரியான்ஷீ ரஜாவத், டென்மார்க் வீரர் மேக்னஸ் ஜோஹான்னசனைச் சந்தித்தார்.

இதில் ரஜாவத் 21-15 என முதல் செட்டை வென்றார். இதற்கு பதிலடியாக மேக்னஸ் 2வது செட்டை 21-19 என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை பிரியான்ஷு ரஜாவத் 21-16 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.