ஆயுஷோமம் செய்துக்கொண்ட எஸ்.ஏ.சந்திரசேகர் – விஜய் பங்கேற்கவில்லை

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோவிலில் திரைப்பட இயக்குனரும், நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு தனது மனைவி ஷோபாவுடன் வந்து ஆயுஷோமம் செய்து கொண்டார்.

மேலும், தனது மகன் விஜய் பெயரில் அர்ச்சனையும் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார். நடிகர் விஜய் இல்லாமல் இயக்குனர் சந்திர சேகர் ஆயுஷோமம் செய்து கொண்டதைத் தொடர்ந்து பீஸ்ட் பட ஹீரோயின் பிறந்தநாளுக்கெல்லாம் கேக் வெட்டி கொண்டாடிய விஜய் ஜோசப் அப்பாவின் 80-வது பிறந்த நாளில் கூடவாவது இருந்திருக்கலாம் என்று ரசிகர்கள் மத்தியில் பல கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools