Tamilசெய்திகள்

ஆந்திராவில் லாரி மோதி விபத்து – 3 யானைகள் பலி

ஆந்திர மாநிலத்தின் ஜகர்மலா பகுதியில் லாரி மோதிய விபத்தில் 3 யானைகள் பரிதாபமாக உயிரிழந்தன.

சித்தூர் – பலமனேரு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. 2 குட்டிகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்த விவகாரம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.