Tamilவிளையாட்டு

ஆட்டோகிராப் போட்ட பந்தை சிறுவர்களுக்கு பரிசளித்த ராகானே

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கொல்கத்தா அணி
வீரர்கள் பயிற்சியின் போது ரகானே சிறுவர்களுக்கு பந்தை பரிசாக வழங்கியதை கொல்கத்தா அணியினர் டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.

அந்த வீடியோவில் கொல்கத்தா அணியினர் பயிற்சி செய்த போது ரகானே ஒரு பந்தில் அவரது கையெழுத்தை போட்டு அந்த சிறுவர்களிடம் வழங்கினார். பந்தை பெற்ற சிறுவர்களில் ஒருவன்
உற்சாகத்துடன் ரகானேவுக்கு நன்றி தெரிவித்தான். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.