ஆசியக் கோப்பை கிரிக்கெட் – இந்திய அணி அறிவிப்பு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 2019-ம் ஆண்டிற்கு பிறகு இந்த ஆண்டு நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவிருந்த இந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, ஆசியக் கோப்பை ஆகஸ்ட் 27-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஆகஸ்ட் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கான முன்னோட்டமாக ஆசியக் கோப்பை தொடர் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, ஆர்.அஸ்வின், யுஸ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. காயம் காரணமாக பும்ரா தொடரிலிருந்து விலகியுள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools