Tamilசெய்திகள்

அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 59 ஆக உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயது 58-லிருந்து 59ஆக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதும் 59-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவன பணியாளர்களின் ஓய்வு வயதும் 59ஆக அதிகரிக்கும் உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *