Tamilசெய்திகள்

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர், கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார். தினந்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார்.

சம்பத் ராய் கூறியதாவது:-

கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது. 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் பணிமனையில், கோவில் கட்டுமானத்துக்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், அந்த இடத்துக்கும் சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:-

ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரமாண்டமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள்கள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில், சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக வழியில் உள்ள கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முதலில், இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதிலும், தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும், வீடுகளையும் இடிக்கிறார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு பிரமாண்ட கோவில் கட்ட கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் 9-ந் தேதி சுப்ரீம் கோா்ட்டு அனுமதி அளித்தது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு 5-ந் தேதி பிரதமர் மோடி, ராமர் கோவில் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

2 ஆண்டுகளுக்கு மேலாக கட்டுமான பணி நடந்து வரும் நிலையில், ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அயோத்தியில் முகாமிட்டுள்ள அவர், கரசேவக புரத்தில் தங்கி இருக்கிறார். தினந்தோறும் கட்டுமான பணிகளை மேற்பார்வையிடுவதுடன், அதன் முன்னேற்றம் குறித்து கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்து வருகிறார்.

சம்பத் ராய் கூறியதாவது:-

கோவில் கட்டுமான பணி மற்றும் கோவிலை சுற்றி உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 40 சதவீத கட்டுமான பணி முடிந்துள்ளது. 80 சதவீத பீட பணி முடிந்துள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இது கடவுள் காரியம் என்பதால், பணத்துக்கு தட்டுப்பாடு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில் பணிமனையில், கோவில் கட்டுமானத்துக்கான கற்களை செதுக்கும் பணியில் ஆண், பெண் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்காலிக ராமர் கோவிலில் சாமி கும்பிட வருபவர்கள், அந்த இடத்துக்கும் சென்று பார்ப்பது வழக்கமாக உள்ளது. கற்களை தொட்டு கும்பிடுவதுடன், புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார்கள்.

இதுதொடர்பாக ராமஜென்ம பூமி அறக்கட்டளை அதிகாரிகள் கூறியதாவது:-

ராமர் கோவில் ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிலைத்திருக்கும் வகையில் மண்ணில் பிரமாண்டமான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்குள் பயன்படுத்த ராஜஸ்தான் மாநிலம் மக்ரானா மலையில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட மார்பிள்கள் பயன்படுத்தப்படும். மார்பிள்கள் செதுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செதுக்கப்பட்ட மார்பிள் கற்கள் ஏற்கனவே அயோத்திக்கு வந்து விட்டன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ராமர் கோவிலை சுற்றி உள்ள 70 ஏக்கர் நிலத்தில், சீதை, லட்சுமணன், விநாயகர், சபரி, ஜடாயு, வால்மீகி ஆகியோருக்கும் கோவில்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புகழ்பெற்ற அனுமன்காரி கோவிலுக்கு செல்லும் சாலை அகலப்படுத்தப்படுகிறது. அதற்காக வழியில் உள்ள கடைகள், வீடுகள் இடிக்கப்பட்டு வருகின்றன. முதலில், இதற்கு எதிர்ப்பு எழுந்தபோதிலும், தற்போது உள்ளூர் மக்கள் தாங்களே முன்வந்து தங்கள் கடைகளையும், வீடுகளையும் இடிக்கிறார்கள்.