Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – 4 வது சுற்றில் நடால் அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. 22 கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற சாதனையாளரும், உலகின் இரண்டாம் நிலை வீரருமான ரபெல் நடால் ( ஸ்பெயின் ) 4-வது சுற்று ஆட்டத்தில் அமெரிக்காவை சேர்ந்த 22-ம் நிலை வீரரான பிரான்செஸ்டியாபோவை எதிர் கொண்டார்.

இதில் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடால் அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார். டியாபோ 6-4 , 4-6 , 6-4 , 6-3 என்ற செட் கணக்கில் நடாலை வீழ்த்தி முதல் முறையாக கால்இறுதிக்கு முன்னேறினார். டியாபோ கால்இறுதி ஆட்டத்தில் ரஷியாவை சேர்ந்த ஆந்த்ரே ருப்லெவை சந்திக்கிறார்.

9-வது வரிசையில் உள்ள அவர் 6-4 , 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் 7-ம் நிலை வீரரான கேமரூன் நோரியை (இங்கிலாந்து) எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் சின்னா (இத்தாலி) வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் (போலந்து ) 4-வது சுற்றில் ஜெர்மனியை சேர்ந்த ஜிலி நீமெயரை சந்தித்தார். இகா 2-6, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.

ஸ்வியாடெக் கால் இறுதியில் 8-வது வரிசையில் இருக்கும் அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவை எதிர் கொள்கிறார். பெகுலா 4-வது சுற்றில் 6-3, 6-2 என்ற கணக்கில் 21-வது வரிசை யில் இருக்கும் பெட்ரா கிவிட்டோவை (குரேஷியா) தோற்கடித்தார்.

மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீராங்கனையான ஷபலென்கா (பெலாரஸ்) 3-6, 6-3, 6-2 என்ற கணக்கில் டேனிலி கோலின்சை (அமெரிக்கா) தோற்கடித்தார். இன்னொரு போட்டியில் 22-வது வரிசையில் உள்ள கரோலின் பிளிஸ்கோவா (செக் குடியரசு) 7-5, 6-7, (5-7), 6-2 என்ற கணக்கில் அசரென்சாவை (பெலாரஸ்) வீழ்த்தினார். கால் இறுதி ஆட்டத்தில் ஷபலென்கா-பிளிஸ்கோவா மோதுகின்றனர்.