Tamilவிளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து சானியா மிர்சா விலகல்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக இந்தியாவின் முன்னணி வீராங்கனை சானியா மிர்சா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சானியா மிர்சா கூறுகையில், கனடாவில் இரு வாரங்களுக்கு முன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடினேன். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. அதனால் சில வாரங்கள் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே யு.எஸ். ஓபன் தொடரில் இருந்து விலகுகிறேன் என தெரிவித்துள்ளார்.

சானியா மிர்சா 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர். இரட்டையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.