Tamilசெய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

அந்தமான்  நிக்கோபார் தீவுகளில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 அலகுகளாக பதிவானது. போர்ட் பிளேர் நகரிலிருந்து தென் கிழக்கே 165 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் விளைவாக உயிரிழப்போ, உடமைகள் சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.